புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-02 18:45 GMT

சிவகங்கை,

எரியாத தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், திருப்புவனம்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், காரைக்குடி.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், திருப்பத்தூர். 

Tags:    

மேலும் செய்திகள்