கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு;

Update:2022-07-26 20:09 IST

சரவணம்பட்டி

கோவை ராமநாதபுரம் பூசாரி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு (41) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாததால் தாயார் கமலத்துடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மது அருந்தாமல் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாபு தனது சித்தப்பாவுடன் கோவை காளப்பட்டி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார்.


மாலை வேலை முடிந்தவுடன் கை, கால் கழுவி விட்டு வந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பாபுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்