பெரும்பாலை அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

Update:2023-09-24 01:00 IST

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி 5-வது மைல் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது86). இவர்் நேற்று முன்தினம் பெரும்பாலை அருகே சாலையில் நடந்்து சென்றார். அப்போது பென்னாகரத்தில் இருந்து மேச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் ராமன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிைவத்தனர். அங்கு முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்