திருப்புவனம்
திருப்புவனம் அருகே பழையனூர் போலீஸ் சரகத்தை சேர்ந்தது முதுவந்திடல் காலனி பகுதி. இந்தப் பகுதியை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 18). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளியல் தொட்டியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பி வழியாக மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.