முதியவருக்கு கொலை மிரட்டல்:7 பேர் மீது வழக்கு

போடி அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-10-15 18:45 GMT

போடி அருகே உள்ள வினோபாஜி காலனி பகுதியில் தனியார் தோட்டத்தில் மேலாளராக வேலை செய்து வருபவர் அசோகன் (வயது 67). நேற்று முன்தினம் காலையில் இவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி, பாண்டி, ராஜகோபால், கோபால் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தோட்டத்தின் நுழைவு வாயிலில் உள்ள கதவை திறக்குமாறு கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் கற்களை தூக்கி எறிந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோகன் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்