சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என 9 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-08-05 00:15 IST

பொறையாறு:

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என 9 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடியில் 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாகை. அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்து தலைமையிலும தரங்கம்பாடி பஞ்சாயத்தார் முன்னிலையிலும் நடந்தஇந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 9 மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

சுருக்குமடி வலை

சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக என்ஜின்கள் பொருத்தப்பட்ட படகுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வருகிற 18-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம்,9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இந்த கோரிக்கை மனுவினை அளிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் 9 மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்