அரசு மருத்துவமனையில் டாக்டரின் மடிக்கணினி திருட்டு

கம்பம் அரசு மருத்துவமனையில் டாக்டரின் மடிக்கணினி திருடுபோனது.;

Update:2023-04-05 02:15 IST

கம்பம் சி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் கோகுலன் (வயது 30). இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு பணிக்கு வந்த கோகுலன், மருத்துவமனைக்கு தனது மடிக்கணினியை எடுத்து வந்தார்.

அப்போது அந்த மடிக்கணினியை டாக்டர்களுக்கான அறையில் வைத்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மடிக்கணினியை காணவில்லை. இதுகுறித்து கோகுலன், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்