வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-05-01 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). நேற்று முன்தினம் இவர் எறையூர் சாலையில் உள்ள தனது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். களத்துமேடு அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்