கார் மோதி விவசாயி சாவு

சங்கரன்கோவில் அருகே கார் மோதி விவசாயி இறந்தார்.

Update: 2023-06-11 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை விவசாய கிணற்றுக்கு செல்வதற்காக குருக்கள்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாத்துரை நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சின்னக்கோவிலான் குளம் போலீசார் அய்யாத்துரையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்