விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் கோட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18-ந் தேதி நடக்கிறது.;

Update:2023-05-16 00:15 IST


திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி வருகிற 18-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்