விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது;
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.