10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
செல்வபுரம்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வேலை
கோவை தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் காயத்ரி (வயது 30). ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பணியில் சேர முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் காயத்ரிக்கு துடியலூர் சுப்புநாயக்கன்பாளையத் தை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா (29), அவருடைய மனைவி நிரஞ்சனா (28) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள், காயத்ரியிடம் சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எங்களுக்கு தெரிந்த ஒருவர் வேலை பார்க்கிறார். அங்கு நீங்கள் பதிவு செய்து விட்டால் தேர்வு எழுதாமல் அவர் மூலமாக அரசு வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
ரூ.24 லட்சம் மோசடி
அதை நம்பிய காயத்ரி, மேலும் சிலரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து காயத்ரி உட்பட 10 பேர் மொத்தம் ரூ.23 லட்சத்து 95 ஆயிரத்தை நிரஞ்சனாவிடம் கொடுத்தனர். ஆனால் அந்த தம்பதியினர் கூறியபடி அரசு வேலை வாங்கி தராமல் ரூ.24 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.
இது குறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து நிரஞ்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறை வான அவரது கணவர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இது போல் அவர்கள் வேறு யாரிடமாவது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா?, மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.