இலவச பொது மருத்துவ முகாம்

ராஜிவ்காந்தி நகரில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-26 19:01 GMT

வேலூர் மாநகராட்சி 50-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமாரும், கஸ்பா நகர்ப்புற சுகாதார நிலையமும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர். கஸ்பா நகர்ப்புற சுகாதார நிலைய டாக்டர்கள் கலந்து கொண்டு பல் மருத்துவம், பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் ராஜீவ் காந்திநகர், அண்ணா நகர் உள்பட 50-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் 250 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். அ.தி.மு.க. வட்ட செயலாளர் சி.கே.ஜி. விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்