விஷ தழையை அரைத்து குடித்து பெண் சாவு
விஷ தழையை அரைத்து குடித்து பெண் இறந்தார்.;
ஆற்காடு
விஷ தழையை அரைத்து குடித்து பெண் சாவு இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இவரது மகன் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க பத்மாவதி வீட்டில் இருந்த நகையை மகனுக்கு கொடுத்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பத்மாவதி விஷ தழையை அரைத்து குடித்துள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.