தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;
திருப்பரங்குன்றம்
மதுரை பைக்காராவில் வசித்து வந்தவர் முத்துமாரி (வயது 40). டிரைவர். குடும்ப தகராறில் மன விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் கூத்தியார்குண்டு கண்மாய்கரை பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த திருநகர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.