தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-07-31 18:45 GMT

தூத்துக்குடி தபால் தந்தி காலனி ஆசீர்வாத நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் சங்கர் (வயது 28). இவர் வீட்டில் மின்மோட்டாரில் தண்ணீர் குழாயை பொருத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டாரில் பரவி இருந்த மின்சாரம் சங்கர் மீது தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்த சங்கரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்