தூத்துக்குடியில்குளத்தில் தவறி விழுந்த பெண் சாவு

தூத்துக்குடியில் குளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-09-15 18:45 GMT

தூத்துக்குடி கோரம்பள்ளம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். கூலிதொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 48). இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோரம்பள்ளம் அருகே உள்ள கைலாசபுரம் குளத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக சிப்காட் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முருகேஸ்வரி என்றும், குளத்தில் தவறி விழுந்து இறந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்