பச்சிளம் பெண்குழந்தை திடீர் சாவு

பச்சிளம் பெண்குழந்தை திடீரென இறந்தது.;

Update:2023-09-30 01:30 IST

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். லேத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் தீபிகா என்ற மகள் உள்ளார். இதற்கிடையே, முத்துலட்சுமிக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்