வெளிமாநில, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிய அறிவுறுத்தல்

வெளிமாநில, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிய அறிவுறுத்தப்பட்டது.;

Update:2023-01-27 00:15 IST

அரியலூவெளிமாநில, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிய அறிவுறுத்தல்ரில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை HTTPS://labour.tn.gov.in/ism/ என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய தகவல்களை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் பதிவு எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்குரிய சேம நலநிதியை செயலர், தொழிலாளர் நல அலுவலர், தேனாம்பேட்டை, சென்னை-600006 என்ற முகவரிக்கு வரைவோலை மூலம் அல்லது HTTPS://www.twb.tn.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனையும் செய்யலாம். மேலும், கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும். தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்யும்போது, தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்