குமரிக்கு 3,200 டன் ரேஷன் அரிசி வந்தது

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு 3,200 டன் ரேஷன் அரிசி வந்தது

Update: 2022-05-25 20:30 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் காலை தெலுங்கானாவில் இருந்து 3,200 டன் ரேஷன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 40 வேகன்களில் இந்த அரிசி வந்துள்ளது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்