மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு உயிரிழந்தார்.;
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள கூடலூர் நத்த கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 36). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளில் ஆனந்தூர் சாலையில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.