விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-17 19:15 GMT

காரைக்கால் மாவட்டம் நிரவி காக்காமொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ராஜமாணிக்கம் (வயது57). தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 கால்களும் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, விரல்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் காலில் வலி அதிகரித்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முடிவெட்ட செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் கொத்தமங்கலம் கருங்கன்னி வாய்க்கால் அருகில் பருத்திக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மோட்டார் சைக்கிளில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ராஜமாணிக்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் ராஜமாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்