தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 18:48 GMT

விராலிமலை அருகே அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). கொத்தனார். இவர் தற்போது அன்னவாசல் என்.எஸ்.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரும், கனிமொழி என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருண்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்