சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
எலக்ட்ரீசியன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் என்ற குமார். இவருடைய மகன் ஜெரால்டு (வயது 25). எலக்ட்ரீசியன். இவரும் அதே ஊரைச்சேர்ந்த உதவியாளரான ரோகித்தும் (19) மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு சித்தாலங்குடி கிராமத்தை நோக்கி சென்றனர்.
அப்போது சோழவந்தான் பசும்பொன்நகரைச்சேர்ந்த கொத்தனாரான நாகேந்திரன் (25) மோட்டார் சைக்கிளில் குமாரத்தில் இருந்து சோழவந்தான் நோக்கி வந்து கொண்டிருந்தார். சித்தாலங்குடி அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
2 பேர் சாவு
இந்த விபத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெரால்டு பரிதாபமாக இறந்தார். நாகேந்திரனும், ேராகித்தும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் இறந்தார். ரோகித் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, ஏட்டு சிக்கந்தர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.