நகராட்சி கூட்டம்

சங்கரன்கோவிலில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-31 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள் நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டதற்கும், பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டத்தை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்