அழுகிய நிலையில் முதியவர் பிணம்

அழுகிய நிலையில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.;

Update:2023-04-16 00:15 IST

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி ஞானியார் மடம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்துற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் இறந்தவர் திருப்பத்தூர் அடுத்த ஆ.தெக்கூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 69) என தெரியவந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்