உலக தண்ணீர் தினத்தையொட்டி130 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்:22-ந்தேதி நடக்கிறது

உலக தண்ணீர் தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-03-18 18:45 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தையொட்டி வருகிற 22-ந்தேதி காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் வகையில் கிராமசபை கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். எனவே, இதில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்