பத்மனாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விழா ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஓணம் பண்டிகை விடுமுறை விடப்பட்டு அரண்மனை திறக்கப்படவில்லை.

Update: 2023-08-29 16:29 GMT

தக்கலை,

தக்கலையில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பெருமளவில் வந்து செல்கின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பத்மனாபபுரம் அரண்மனையில் 10 நாள்கள் கோல மிட்டு ஊஞ்சல் கட்டி கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் கேரள மாநில சுற்றுலா துறையின் சார்பில் ஓணம் விழா கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஓணம் ஊஞ்சல் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ஓணம் பண்டிகை விடுமுறை விடப்பட்டு அரண்மனை திறக்கப்படவில்லை.நேற்று வாராந்திர விடுமுறை என்பதால் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது சம்மந்தமாக பத்மனாபபுரம் கோட்டை அரிமா சங்க தலைவர் பிரைட்டஸ் ஜெயன் கூறுகையில், வருடம் தோறும் கேரளா சுற்றுலா துறை சார்பில் பத்மனாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா10, நாள்கள் நடைபெறும். இந்த வருடம் ஓணம் விழா கொண்டாடாதது அதிர்ச்சியாக உள்ளது.வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் ஓணம் விழா கொண்டாட அரசு முன்வரவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்