ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பு: எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சட்ட ஆணையம் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.;

Update:2022-12-28 20:11 IST

சென்னை,

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்டத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்