சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-03-31 09:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பாண்டி (வயது 36). பெயிண்டர். கடந்த 2010-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் தந்தை தாம்பரம் போலீஸ்நிலையத்தில் தனது மகளை செல்லப்பாண்டி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி செல்லப்பாண்டி மீது சுமர்த்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்ககோரியும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கில் சசிரேகா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்