மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

தென்காசி, நெல்லை மாவட்டத்தில் மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update:2023-04-02 00:15 IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தலைமையில் மின்சார வாரிய குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 6-ந்தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 11-ந்தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 13-ந்தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 18-ந்தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 21-ந்தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 25-ந்தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்