நாமக்கல்:
வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர் மற்றும் ஒருவந்தூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.