சங்கராபுரம்,
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று சங்கராபுரத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.