அடையாறு ஆற்றில் ஆண் பிணம் மீட்பு - போலீசார் விசாரணை

அடையாறு ஆற்றில் ஆண் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-30 04:59 GMT

சென்னை அடையாறு ஆற்றில் ஆண் ஒருவரின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட நபர் திருவான்மியூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என தெரியவந்தது. இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (36). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், புழல் ஏரி மதகு அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட பெணை யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசி விட்டுச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு பெத்தானியா தெருவை சேர்ந்தவர் நிர்மல் (22). வீட்டிலிருந்து மாயமான நிலையில் நேற்று காலை அவரது உடல் ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் அவரது கரை ஒதுங்கியது குறித்து ஆவடி டேங்க் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்