டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-03 00:50 IST

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபெருமாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மூலைக்கரைப்பட்டி-நெல்லை மெயின் ரோட்டில் பெருமாள்நகர் பஸ் நிறுத்தம் அருகே டிராக்டரில் அனுமதியின்றி எம்.சாண்ட் மணலை கொண்டு‌ சென்ற மூலைக்கரைப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து எம்.சாண்ட் மணல், டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்