பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்தது.

Update: 2022-11-01 18:45 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று விவசாயிகள் 742 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.741-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.14 அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.755-க்கும், குறைந்தபட்சமாக ரூ.301-க்கும், சராசரியாக ரூ.667.16-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்