புனித அருளானந்தர் திருவிழா கொடியேற்றம்

புனித அருளானந்தர் திருவிழா கொடியேற்றம்

Update: 2023-09-06 18:45 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி ராயப்பபுரம் கிராமத்தில் புனித அருளானந்தரின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிராம மக்கள் தலைமை தாங்கினர். புனித அருளானந்தரின் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக பங்குத்தந்தை அருள்ஜோதி மைக்கேல் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நற்கருணை பவனி, புது நன்மை, திருப்பலியும், திருமுழுக்கும், அதனை தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குத் தந்தைகள், தொன் போஸ்கோ அருட்தந்தையர்கள், பொன்சாகா அருட் சகோதரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்