பாலக்கோடு
மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீராசனூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முரளி (வயது 26). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தார். ஆனால் முரளி வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் செல்வம், முரளியிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முரளி நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.