வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (வயது 30). இவர் சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு துரித உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அங்குள்ள ஓய்வு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.