ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் வெல்டிங் தொழிலாளியை முன்விரோதம் காரணமாக கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ரவுடியான ரத்தினவேல் (வயது 20) கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மீது 6 வழக்குகள் இருப்பதும், அவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.