விபத்தில் விவசாயி பலி

கண்டமனூர் அருகே மோட்டார்சைக்கிள் மரத்திய மோதியதில் விவசாயி பலியானார்

Update: 2022-08-11 16:09 GMT

கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). விவசாயி. நேற்று இவர், தேனியில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஜி.உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஜி.உசிலம்பட்டி அருகே சாலை வளைவில் திரும்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்