சூலூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் சக்தி பிரியா (வயது23). இவர் கோவை சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் கோகுல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.