மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மயிலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டனா்.

Update: 2022-10-21 18:45 GMT


மயிலம், 

மயிலம் அருகே கர்ணாவூரில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று இரவு, மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுவிட்டனர். உண்டியலில் சுமார் ரூ.30 ஆயிரம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்