விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை ஏலம்விட நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

ஒப்பந்த பணிக்கான தொைக வழங்கப்படாததால் விருதுநகர் கலெக்டர் அலுவலக கட்டிடத்தை ஏலத்தில் விட உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-03-22 01:28 IST


ஒப்பந்த பணிக்கான தொைக வழங்கப்படாததால் விருதுநகர் கலெக்டர் அலுவலக கட்டிடத்தை ஏலத்தில் விட உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்தப்பணி

மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான இவர் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்தில் இருந்து சாத்தூர் வரை சாலை பணிகளை மேற்கொண்டார்.

இவர் பணிகளை செய்தபோது, தேசிய நெடுஞ்சாலை துறையினர் இவரது ஒப்பந்தத்தை மாற்றி விட்டு வேறொரு ஒப்பந்தக்காரரிடம் பணியை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சவரிமுத்து செய்த பணிகளுக்காக அவருக்கு ரூ.3 கோடியே 30 லட்சத்து 40 ஆயிரம் வரை வழங்க வேண்டி இருந்ததாம். இந்தப்பணம் கிடைக்காத நிலையில் ஒப்பந்தக்காரர் சவரிமுத்து இறந்துவிட்டார். அவரது வாரிசுகளான சூசையம்மாள், ஆல்பர்ட் சேகர், குளோரி, செங்கோல், லியோ பிரான்சிஸ் சேவியர், அலங்கார பினோமி, ஜோஸ்வின் நவமணி ஆகியோர், அந்த பணத்தை கேட்டு விருதுநகர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கில், விருதுநகர் மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை நெல்லை, கோட்ட என்ஜினீயர், தேசிய நெடுஞ்சாலை விருதுநகர் உள்பட 4 அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.

கடந்த 28.6.2007 அன்று ரூ.87 லட்சத்து 1200-ஐ வழக்கு தாக்கலான நாள் முதல் தொகை செலுத்தும் நாள் வரை 6 சதவீத வட்டியுடன், வழக்கு செலவு தொகையும் சேர்த்து செலுத்துமாறு அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ரூ.68 லட்சத்து 43 ஆயிரத்தை டெபாசிட் செய்யும்படி உத்தரவிட்டது. அந்த பணத்தில் ரூ.40 லட்சம் சூசையம்மாள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தொகையை 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என கடந்த 26.5.2021-ல் மதுரை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.

நிறைவேற்றுதல் மனு

ஐகோர்ட்டு உத்தரவின்படி, சவரிமுத்து குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ெமாத்தம் ரூ.2 கோடியே 35 லட்சத்து 208 செலுத்தப்பட வேண்டி இருந்ததாக தெரியவருகிறது. ஆனால், இந்த தொகை செலுத்தாத நிலையில் இது தொடர்பாக மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார், இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அதன் பின்பும் பணம் செலுத்தப்படாத நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

நோட்டீஸ் ஒட்டப்பட்டது

இதனைத் தொடர்ந்து கோர்ட்டு பணியாளர் ஜெயக்குமார், கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சொத்து ஏல நோட்டீசை ஒட்டினார். கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மாதம் 31-ந் தேதி ஏலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வாகன விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகை வழங்காததால் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டு அதன் பின்னர், கோர்ட்டில் முறையிட்டதின் பேரில் கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்