மகளிர் தின விழா

ராசிபாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

மோகனூர்

மோகனூர் ஒன்றியம், ராசிபாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கி பேசினார். விழாவில் மகளிருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராசிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்