தொழிலாளி கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-18 01:51 IST

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் பொட்டல் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தகராறு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்