தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-27 19:47 GMT

பேட்டை:

நெல்லை கண்டியபேரியை சேர்ந்தவர் முருகன் மகன் நாகராஜன் (வயது 30). தொழிலாளியான இவரது மனைவி மாதவி (30). நாகராஜன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டும், வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்தது. இதையடுத்து மாதவி பழையபேட்டையில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த நாகராஜன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நாகராஜன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்