நாய் கடித்து தொழிலாளி சாவு

கோவையில் நாய் கடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-09 07:00 IST

கோவை

கோவை வேலாண்டிபாளையம் கொண்டசாமிநாயுடு 2-வது வீதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 45). தொழிலாளி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை தெருநாய் கடித்தது. இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்