உலக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

அரசு கலைக்கல்லூரியில் உலக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-09-15 23:55 IST

அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் உலக சமூக நீதி நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் உலக சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் கல்லூரியின் மின்னணுவியல் துறைத் தலைவர் அன்பரசு, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சாகுல்அமீது, வெங்கடேசன், பேராசிரியர்கள் வைரமூர்த்தி, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்