அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகல் ; 84 தொகுதிகளில் தனித்து போட்டி - நடிகர் கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியது ; 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக நடிகர் கருணாஸ் கூறினார்.

Update: 2021-03-06 06:46 GMT
சென்னை

நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்:

முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும். 

கூவத்தூரில் சசிகலா முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதா புகைப்படம் முன்பு சத்தியம் செய்தனர்.
 என  கூறினார்.

மேலும் செய்திகள்